NATIONAL

அக்டோபர் முதல் ஏர் ஆசியாவின் பரிசீலனை கட்டணம் ரத்து

30 ஜூலை 2019, 3:52 AM
அக்டோபர் முதல் ஏர் ஆசியாவின் பரிசீலனை கட்டணம் ரத்து

கோலாலம்பூர், ஜூலை 30-

மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா, இணையம் மற்றும் கடன் பற்று அட்டை வாயிலாகக் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு வரும் அக்டோபர் முதல் செயலாக்க கட்டணத்தை ரத்து செய்யவிருக்கிறது.

"இன்னும் மலிவான, பாதுகாப்பான மற்றும் மோசடி குறைந்த போக்குவரத்து சேவையை வழங்கும் பொருட்டு நாங்கள் சில கட்டணங்களைத் தொடர்ந்து விதித்து வருகிறோம். எந்தவொரு கட்டணமும் இல்லாத வழிமுறையும் நிச்சயம் கண்டறியப்படும்" என்று இந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.

தனது டுவீட்டரில் technologyrules dan #makingairfaresaffordable ஆகிய இரு குறியீடுகள் வாயிலாக இதனை டோனி அறிவித்தார். ஏர் ஆசியா டிக்கெட் செயலாக்க நடவடிக்கைக்கு தற்போது 4 வெள்ளி கட்டணத்தை விதித்து வருகிறது. இது 16 வெள்ளி வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.