ad
Uncategorized @ta

லோம்போக் நிலநடுக்கம் : இரு மலேசியர்கள் பலி, எழுவர் காயமடைந்தனர்

17 மார்ச் 2019, 1:50 PM
லோம்போக் நிலநடுக்கம் : இரு மலேசியர்கள் பலி, எழுவர் காயமடைந்தனர்

ஜாக்கர்த்தா , மார்ச் 18-

லோம்போக்கில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் லிம் சை வா எனும் மற்றொரு மலேசியர் பலியாகிவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மரணமடைந்த அந்தப் பெண்மணி குறித்து முழுமையான விவரங்கள் இன்று காலை 6 மணி வரை கிடைக்கப்பெறவில்லை என்று மலேசியத் தூதரகம் தெரிவித்தது.

இந்த இயற்கை பேரிடரில் மேலும் ஏழு மலேசியர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் லோம்போக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தோனேசியாவுக்கான மலேசிய துணை தூதர் ஜாம்ஷாரி ஷாஹாரான் கூறினார்.

“லோம்போக் தீமோரில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் இரு மலேசியர்கள் உயிரிழந்துள்ள வேளையில் எழுவர் காயமடைந்துள்ளனர். மேலும் 13 பேர் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார் அவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.